தேசிய செய்திகள்

டெல்லி கலவர பகுதிகளை பார்வையிட 5 பேர் குழு: சோனியா காந்தி நடவடிக்கை

டெல்லி கலவர பகுதிகளை பார்வையிட 5 பேர் குழுவினை அனுப்பி சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட 5 மூத்த தலைவர்களை கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பி வைத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், டெல்லிக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சக்திசிங் கோகில், அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, முன்னாள் எம்.பி. தாரிக் அன்வர், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கலவர பகுதிகளை பார்வையிட்டு, சூழ்நிலையையும், விளைவுகளையும் ஆய்வு செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கையை சோனியா காந்தியிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறு அந்த குழுவினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு