தேசிய செய்திகள்

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் அழிப்பு

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்களை போலீசார் ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர்.

தினத்தந்தி

பெனுகொண்டா,

ஆந்திராவில் மதுபானத்தின் விலை சற்று அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

இதை தடுப்பதற்காக சேதனைசாவடிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பேலீசார் இரண்டரை கேடி ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 858 பெட்டிகளில் அடுக்கி பெனுகொண்டா காவல் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர்

இந்த நிலையில் அவற்றை சாலையில் வரிசையாக அடுக்கி ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர். அப்போது உடைந்த மதுபாட்டில்களில் இருந்து வெளியான மதுபானம் ஆறு போல் சாலையில் ஓடியது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?