தேசிய செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீன் கோரி திலீப் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரி திலீப் மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

பிரபல கேரள நடிகை ஒருவரை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பபட்ட வழக்கில் நடிகர் திலீப் ஜூலை 10 ந்தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். திலீப்பின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி அங்கமலி நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், தனது நீதிமன்ற காவல் 60 நாட்களை கடந்துவிட்டதாகவும் தன் மீதான விசாரணை முடிந்துவிட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த அங்கமலி நீதிமன்றம், நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.

திலீப் ஜாமீன் கோரி தாக்கல் செய்த 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து