தேசிய செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்காதது, குடியரசை மதிப்பிழக்கச்செய்யும் - கபில் சிபல் கருத்து

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்காதது, குடியரசை மதிப்பிழக்கச்செய்யும் என்று கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியே திறப்பது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை உருவாக்கி, விவாதப்பொருள் ஆகி உள்ளது.

இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படுகிறது. நாடாளுமன்றம் நமது குடியரசை அடையாளம் காட்டுகிறது. குடியரசின் தலைவர், ஜனாதிபதிதான். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில், ஜனாதிபதி கலந்து கொள்ளாதது, நாடாளுமன்ற நெறிமுறைகளை மதிப்பிழக்கச்செய்வதாகத்தான் அமையும். அரசு கண்டுகொள்ளுமா?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை