தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பால் தாராவியில் மேலும் இருவர் உயிரிழப்பு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான தாராவி பகுதியில் கொரோனா ஊடுருவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தாராவியின் முக்கிய இடங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், மும்பை தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் இருவர் இன்று பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்