தேசிய செய்திகள்

இந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் 47 சதவீதம் அதிகரிப்பு: மத்திய நேரடி வரி வாரியம்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த நிதியாண்டில் தற்போதுவரை நேரடி வரி வசூல் 47 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேரடி வரி வருவாய்

2021-2022-ம் நிதி ஆண்டின் 2-வது காலாண்டு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை மொத்தம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து 679 கோடி நேரடி வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வசூல் ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 242 கோடியாக இருந்தது. தற்போதைய காலத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 47 சதவீதம் அதிகமாக வரி வசூலாகி உள்ளது.2019-2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய வசூல் 16.75 சதவீதம் அதிகமாகும். 2019-2020-ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.5 லட்சத்து 53 ஆயிரத்து 63 கோடி வரி வசூலானது.

அட்வான்ஸ் வரி

2021-2022-ம் நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு தொடங்கிய ஜூலை 1-ந்தேதி முதல் தற்போதைய தேதி வரை ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 71 கோடி அட்வான்ஸ் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டைவிட 51.50 சதவீதம் அதிகமாகும். இந்த வரி வசூல் அடுத்த காலாண்டில் அதிகரிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை