அஜித்பவார் 
தேசிய செய்திகள்

அவுரங்காபாத் கொரோனா சிகிச்சை மையத்தில், பெண் நோயாளியை மானபங்கம் செய்த டாக்டர் பணிநீக்கம்; சட்டசபையில் அஜித்பவார் தகவல்

கொரோனா சிகிச்சை மையத்தில் பெண் நோயாளியை மானபங்கம் செய்த டாக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சட்டசபையில் அஜித்பவார் கூறினார்.

தினத்தந்தி

டாக்டர் பணி நீக்கம்

அவுரங்காபாத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் டாக்டர் ஒருவர் பெண்நோயாளியை மானபங்கம் செய்த சம்பவம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. மனிஷா சவுத்திரி பேசினார். அப்போது அவர், "கொரோனா சிகிச்சை மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. இது துரதிருஷ்டமானது. அரசு மீது மக்களுக்கு பயமில்லை. இந்த விவகாரத்தில் மாநில உள்துறை உடனடியாக பதில் அளிக்க வேண்டும்" என்றார்.

இதேபோல தேவேந்திர பட்னாவிசும், கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செயல்பாட்டு நெறிமுறைகள் வேண்டும் என முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.

இதற்கு பதில் அளித்த துணை முதல்-மந்திரி அஜித்பவார் "அவுரங்காபாத் சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை முடிந்த பிறகு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா சிகிச்சை மையங்களுக்கான செயல்பாட்டு நெறிமுறைகள் மார்ச் 31-ந் தேதிக்குள் வெளியிடப்படும்" என்றார்.

இதேபோல எல்கர் பரிஷத் மாநாட்டில் ஒரு குறிப்பிட்ட மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சர்ஜீல் உஸ்மானி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித்பவார் உறுதி அளித்தார்.

அதே நேரத்தில் தேசபாதுகாப்பு குறித்த தகவல்களை வாட்ஸ்-அப்பில் பகிர்ந்த அர்னாப் கோஸ்சுவாமியின் கைதுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்ததையும் அஜித்பவார் விமர்சித்து பேசினார். அதில் அவர், தேசம் மற்றும் மாநில பாதுகாப்பு விஷயத்தில் இரட்டை வேடம் போடக்கூடாது என பெயரை குறிப்பிடாமல் பா.ஜனதாவை கண்டித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்