தேசிய செய்திகள்

நண்பர்களுக்கு இடையே தகராறு; 3 பேர் படுகாயம்

உப்பள்ளி அருகே நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினத்தந்தி

உப்பள்ளி;

தார்வா மாவட்டம் உப்பள்ளி கசபா பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஆவேஷ். இவருக்கும் அவரது நண்பர் ஊவேஷ் உள்பட 2 பேருக்கும் இடையே மாட்டு கொட்டகை வாடகை விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கத்தி, அரிவாளாலும் அவர்கள் தாக்கினர். இதில் ஆவேஷ் மற்றும் ஊவேஷ் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து கசபாபேட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை