கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தம் தர வேண்டாம், என்னை கைது செய்யுங்கள் - மணிஷ் சிசோடியா

சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தம் தர வேண்டாம், என்னை கைது செய்யுங்கள் என்று டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை தர வேண்டாம் என்றும் வேண்டுமானால் என்னை கைது செய்து கொள்ளுங்கள் என்றும் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல் மந்தரி மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் டெல்லியில் பெரும் புயலை கிளப்பி உள்ள நிலையில், மணிஷ் சிசோடியா குறித்த ஸ்டிங் ஆப்ரேஷனை பாஜக வீடியேவாக வெளியிட்டுள்ளது. மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் அந்த வீடியேவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, தம் மீது பெய்யான வழக்கு பேட வேண்டும் என்று சிபிஐ அதிகாரிக்கு அழுத்தம் கெடுத்ததாகவும், இதனால் அவர் தற்கெலை செய்து கெண்டதாக கூறினார். அதிகாரிகளுக்கு எதற்காக, இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறிய மணிஷ் சிசேடியா, ஆபரேஷன் தாமரை தான் மத்திய அரசின் ஒரே வேலையா என்று கேள்வி எழுப்பினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்