தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் ஜோத்பூரில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜெய்பூர்,

இந்தியா முழுவதும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், தடுப்பூசி மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கி, அவர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஊரக பகுதிகளில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என நம்புவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை