தேசிய செய்திகள்

டிஜிட்டல் இந்தியா சட்ட வரைவு ஜூன் மாதம் வெளியிடப்படும் - மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தகவல்

டிஜிட்டல் இந்தியா சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், டிஜிட்டல் இந்தியா சட்ட வரைவு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்ட வரைவு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது இந்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிஜிட்டல் இந்தியா சட்டத்தை வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றவும், அதன் பிறகு இந்த சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு