தேசிய செய்திகள்

டாங்கி தகர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி..!

எளிதில் தூக்கி செல்லக்கூடிய டாங்கி தகர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

தினத்தந்தி

பலசோர்,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய டாங்கி தகர்ப்பு ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இது குறைந்த எடை கொண்டது.

இந்த ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை, நேற்று ஒடிசா மாநிலம் பலசோர் கடற்கரையில் வெற்றிகரமாக நடந்தது. நடமாடும் லாஞ்சரில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. திட்டத்தின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறியதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.ஆர்.டி.ஓ.வுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்