தேசிய செய்திகள்

ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா

அமெரிக்கா, ரஷியா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

தினத்தந்தி

அமராவதி,

இந்தியாவின் ராணுவ வலிமையை மேம்படுத்தும் வகையிலும், பாதுகாப்புத்துறையில் புதிய ஆயுதங்கள், தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், லேசர் ஆயுதத்தை டிஆர்டிஓ இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த லேசர் ஆயுதம் எதிரி நாடுகளின் டிரோன்கள், ஏவுகணைகள், சிறியரக பீரங்கிகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் வல்லமை பெற்றதாகும். ஆந்திராவின் குர்நூல் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் நடுவானில் பறந்துவந்த டிரோனை லேசர் ஆயுதம் நொடிப்பொழுதில் சுட்டு வீழ்த்தியது.

லேசர் ஆயுதம் பரிசோதனை வெற்றிபெற்ற நிலையில் இந்த ஆயுதத்தை வைத்துள்ளஅமெரிக்கா, ரஷியா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து