தேசிய செய்திகள்

விமான நிலையத்திற்கு குடிநீர் கட்; எம்.எல்.ஏ. மகன் பழிக்கு பழியா...?

திருப்பதி ரேனிகுண்டா விமான நிலையம், பணியாளர்கள் குடியிருப்புகளுக்கான தண்ணீர் சப்ளையை எம்.எல்.ஏ. மகன் கட் பண்ணியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டியின் மகன் அபிநயா ரெட்டி. இவர், திருப்பதி துணை மேயராக உள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் இளைஞர் விவசாயி பிரிவின் தலைவராகவும் அபிநயா ரெட்டி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு திருப்பதி வந்த அம்மாநில மந்திரி போட்சா சத்தியநாராயணாவை வரவேற்க திருப்பதி ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு அபிநயா ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

திருப்பதி ரேனிகுண்டா விமான நிலையத்தில், அபிநயா ரெட்டியையும், அவரது ஆதரவாளர்களையும் விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்க விமான நிலைய மேலாளர் சுனில் மறுத்து விட்டார். இதனையடுத்து அபிநயா ரெட்டிக்கும், விமான நிலைய மேலாளர் சுனிலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில், ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இது அபிநயா ரெட்டியின் பதிலடியாக பார்க்கப்பட்டது.

ஆனால், குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. மேலும், வடிகால் பிரச்சினை இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். வடிகால் நீர் தெலுங்கு கங்கை நீரை மாசுபடுத்துகிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து