கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!

அசாமில் மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கம்ருப் மாவட்டத்தில் 'தொலைத்தொடர்பு பணி' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மினி லாரியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போர்கா என்ற இடத்தில் அந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர்.

உடனே டிரைவரும், வாகனத்தில் இருந்த மற்றவர்களும் தப்பி ஓடிவிட்டனர். மினி லாரியை சோதனையிட்டபோது, இசை சாதனங்களிலும், மாற்று டயரிலும் 5 கிலோ அபின், 2 ஆயிரம் போதை மாத்திரைகள் உள்பட 6 கிலோ போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.10 கோடி என்று கருதப்படுகிறது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரையும், மற்றவர்களையும் தேடி வருகிறார்கள்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்