தேசிய செய்திகள்

மிசோரமில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் - 8 பேர் கைது

மியான்மரில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டிக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

ஐசால்,

மிசோரம் மாநில கலால் மற்றும் போதைப்பொருள் துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம்(NCB) மற்றும் எல்லை பாதுகாப்புப் படை(BSF) ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து, கீபாங் மற்றும் செலிங் ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, இரண்டு லாரிகளின் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் 49 கிலோ மெத்தம்பட்டமைன் மற்றும் 36 கிராம் ஹெராயின் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.75 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்கள் மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டிக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்