தேசிய செய்திகள்

வகுப்பறையில் குடிபோதையில் மாணவர்கள் முன் நடனமாடிய பேராசிரியர்-வீடியோ

வகுப்பறையில் குடிபோதையில் மாணவர்கள் முன் நடனமாடிய பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள குருநானக் தேவ் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்.

ரவீந்தர் குமார் என்ற பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறைக்கு வந்து மாணவர்கள் அருகே பாட்டிலில் இருந்து மது அருந்திக்கொண்டே நடனமாடியுள்ளார். அவர் ஒரு பஞ்சாபி திரைப்படப் பாடலுக்கு நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பேராசிரியர் தனது சொந்தப் பணத்தில் மது அருந்துவதாகவும், தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறுகிறார், இவர் கணித பேராசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து, அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உள்ளது. ஆனால் பேராசிரியர் தான் குடிபோதையில் எதையும் செய்யவில்லை என்றும் வேடிக்கைக்காக செய்தேன் என்றும் கூறியுள்ளார்'

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து