தேசிய செய்திகள்

திருமண ஊர்வலத்தில் வாணவேடிக்கையின்போது தீப்பொறி பட்டு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தல், ஆட்டோ எரிந்து சாம்பல்

பொதுமக்கள் வாளி மற்றும் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

தினத்தந்தி

பல்நாடு,

ஆந்திராவில் திருமண ஊர்வலத்தில் வாணவேடிக்கையின்போது தீப்பொறி பட்டு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தல் மற்றும் ஆட்டோ எரிந்து சாம்பலானது.

பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டை கிராமத்தில் பிரம்மையா என்பவருடைய மகனுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மணமகனை வீட்டிலிருந்து மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பட்டாசுகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது தீப்பொறி பட்டு பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்தது. மேலும் திருமணத்தை முன்னிட்டு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தல் மீதும் தீப்பொறிகள் விழுந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

பொதுமக்கள் வாளி மற்றும் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து