தேசிய செய்திகள்

குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு 8.13 மணிக்கு ரிக்டர் 5.5 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அகமதாபாத், பதான் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.

தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் பகுதியில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரில் சரியாக 8.35 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்