தேசிய செய்திகள்

தேர்தல் ஆணையம் திருடர்களை அங்கீகரிக்கலாம், திருட்டை அல்ல - ஆதித்ய தாக்கரே வேதனை

தேர்தல் ஆணையத்தால் திருடர்களை அங்கீகரிக்க முடியும், ஆனால் திருட்டை அல்ல என ஆதித்ய தாக்கரே வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

குடும்பத்திடம் இருந்து பறிபோன கட்சி

தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஏக்நாத் ஷிண்டே தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனா பெயர், சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பால் தாக்கரேவால் தொடங்கப்பட்ட சிவசேனா, அவரது மகன் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து பறிபோய் உள்ளது.

ஆதித்ய தாக்கரே வேதனை

இது தொடர்பாக பால்தாக்கரேவின் பேரனும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- முழுக்க, முழுக்க சமரசம் செய்யப்பட்ட நிறுவனம் (தோதல் ஆணையம்) ஜனநாயகத்தை அழிக்க வேண்டும் என துடிக்கும் திருடர்கள் கூட்டத்துக்கு அங்கீகாரத்தை கொடுத்து உள்ளது. இதனால் திருட்டை அங்கீகரிக்க முடியாது. ஓடி ஒளிந்து, திருட்டு நபர்களுக்கு தான் மற்றவர்களின் அடையாளம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தங்கள் சொந்த முகத்தை காட்ட அவமானமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து