புதுடெல்லி,
கடந்த காலாண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்த பின்னர் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாதேரா தனது ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில் கூற இருப்பதாவது:-
பொருளாதாரம் மந்தநிலையின் ஆழமான படுகுழியில் விழுகிறது. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தில் கத்தி தொங்குகிறது என்று பிரியங்கா காந்தி இந்தி மொழியில் ட்வீட் செய்து உள்ளார்.
மேலும் வாகனத்துறை மற்றும் டிரக் துறையின் சரிவு, உற்பத்தி-போக்குவரத்தில் எதிர்மறையான வளர்ச்சியையும், சந்தையின் நம்பிக்கையும் குறைந்து வருவதற்கான அறிகுறியாகும். மத்திய அரசு எப்போது கண்களைத் திறக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேட்டு உள்ளார்.