கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

புற்றுநோய்க்கு போலி மருந்துகள் தயாரிப்பு: டெல்லியில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை - ரூ.65 லட்சம் சிக்கியது

போலி மருந்துகள் விற்று வந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் புற்றுநோய் பாதிப்புக்கு தனியார் நிறுவனம் ஒன்று மருந்து தயாரித்து குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு விற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் மருந்துகள் போலி என்பதும் ஆஸ்பத்திரி நிர்வாகம், நோயாளிகளை நம்பவைத்து பல லட்சங்களை அந்த நிறுவனம் சுருட்டியதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலி மருந்துகள் விற்று வந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்கள் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ரூ.65 லட்சத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்