தேசிய செய்திகள்

இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன - வெளியுறவு இணை அமைச்சர்

இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் கூறியதாவது:-

இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 62 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன. மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இந்திய தூதரகம் வழங்கி வருகிறது என்று வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்