Image Courtesy: ANI 
தேசிய செய்திகள்

13 மாநிலங்களவை காலியிடங்களுக்கு 31-ந் தேதி தேர்தல்..!

13 மாநிலங்களவை காலியிடங்களுக்கு 31-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால் ஏற்படும் அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

பஞ்சாப் மாநிலத்தில் 5 இடங்களுக்கும், கேரளாவில் 3 இடங்களுக்கும், அசாம் மாநிலத்தில் 2 இடங்களுக்கும், இமாசலபிரதேசம், திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், 14-ந் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு 21-ந் தேதி இறுதிநாள் ஆகும். 31-ந் தேதி தேர்தல் முடிந்தவுடன், அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி