தேசிய செய்திகள்

மின் கம்பிகளை திருடும்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

மின் கம்பிகளை திருடும்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் திகம்கார் மாவட்டத்தில் பனர்சி என்ற கிராமம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை மின்தடை ஏற்பட்டது. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பிகளை திருட முயன்றனர்.

அப்போது திடீரென மீண்டும் மின்சாரம் வந்தது. அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டனர். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் மின்சாரம் தாக்கி பலியானவர்கள் அதே பகுதியை சேர்ந்த கோகுல் குஸ்வாகா, நிவரி மாவட்டத்தை சேர்ந்த பிரிதம், சஞ்சய் பரர் மற்றும் ராஜூ ஆகியோர் என்பது தெரியவந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்