தேசிய செய்திகள்

மின் கட்டண உயர்வு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல். செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழகத்தில் மின்கட்டணம் உயரும் என தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம், சில நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 'தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கும், கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் மின் கட்டண உயர்வுக்கான தடை நீங்கியது.

இதற்கிடையே இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 'இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை