தேசிய செய்திகள்

"ஸ்கேன் மையத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற ஊழியர்கள்" - கோபமடைந்த தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மையத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற ஊழியர்களுக்கு துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு பெண்மணி தனது கணவருக்கு 3 நாள்களாக ஸ்கேன் எடுக்காமல் இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜனிடம் முறையிட்டார்.

இதையடுத்து, ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது அந்த அறை பூட்டியிருந்தது. அதற்கு அதிகாரிகள், ஸ்கேன் மைய ஊழியர்கள் அறையை பூட்டி சாவியை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த தமிழிசை சௌந்தரராஜன், ஊழியர்களுக்கு அந்த அளவிற்கு அலட்சியாம்? என எச்சரிக்கை விடுத்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு