கோப்பு படம் 
தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

சோபியான்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஜைனபோரா பகுதியில் செர்மார்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த என்கவுண்ட்டரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் சந்தோஷ் யாதவ் மற்றும் சவான் ரோமித் தனாஜி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதேபோன்று மோதலில் ஒரு பயங்கரவாதியையும் வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.