தேசிய செய்திகள்

என்.எஸ்.இ முறைகேடு குறித்த அமலாக்கத்துறை வழக்கு - சிபிஐ சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றஞ்சாட்டியது. மேலும் நிதி மற்றும் வணிகத் திட்டங்கள் குறித்த தகவல்களை இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து