தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி கோரிக்கை நிராகரிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஷ்ரா மற்றும் பச்சுயாதவ், பிரேம் பிரகாஷ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 3-ந் தேதி ராஞ்சியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் அவர் தொடர் அரசு அலுவல்கள் காரணமாக 3 வார அவகாசம் கேட்டார். 17-ந் தேதி அவர் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இப்போது அவர் ஒரு நாள் முன்னதாக 16-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை ஏற்க அமலாக்கத்துறை மறுத்து விட்டது. இதனால் அவர் நாளை (17-ந் தேதி) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT