தேசிய செய்திகள்

சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு: பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை!

சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள், செயற்கை குங்குமத்தால் நீர் மாசு அடைவதாக கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு சீசனை ஒட்டி சபரிமலை, பம்பா, எருமேலி பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு, ரசாயன குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள், செயற்கை குங்குமத்தால் நீர் மாசு அடைவதாக கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 'எருமேலியில் உள்ள ஆற்று ஓடைகளின் குறுக்கே வலைகள் அமைக்கப்பட வேண்டும்.

வேதியியல் ரீதியாக தயாரிக்கப்படும் குங்குமம் பயன்பாட்டால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது' என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை