தேசிய செய்திகள்

2019-2020-ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 8.5 சதவீதம் வட்டி

2019-2020-ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்.) அமைப்பில் கொள்கை முடிவுகளை எடுக்கும் மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்க்வார் தலைமையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2019-2020-ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அறக்கட்டளை வாரியத்தின் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டபடி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-2020-ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டதாக தொழிலாளர் நல அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை