தேசிய செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் - ராஜ்நாத் சிங்

பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏரோஸ்பெஸ் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இந்த ஆலையில் பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் பாதுகாப்புப்படையில் இணைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பிரமோஸ் ஏரோஸ்பெஸ் ஆலை பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு பாதுகாப்புப்படைக்கு கொடுக்கப்படும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் , உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, பாதுகாப்புப்படையின் முக்கிய அங்கமாக பிரமோஸ் மாறிவிட்டது. நாட்டின் கனவுகளை நனவாக்கும் வலிமையை பிரமோஸ் ஏவுகணை கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளும் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வட்டத்திற்குள்ளேயே உள்ளன. ஆபரேஷன் சிந்தூரின்போது நடந்தது வெறும் டிரைலர்தான் என்றார். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு