தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்திற்கு வரும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு

மராட்டிய மாநிலத்திற்கு வரும் லாரி டிரைவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரெயில், சாலை மார்க்கமாக மராட்டியம் வரும் அனைவரும் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்து அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என உத்தரவை பிறப்பித்து இருந்தது. இது சரக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு பொருந்தும் என்றும் கூறியிருந்தது.

மேலும் இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்த நிலையில் மாநில அரசு வெளிமாநிலங்களில் இருந்து மராட்டியம் சரக்கு கொண்டு வரும் லாரி டிரைவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை கட்டாயம் இல்லை என கூறியுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், லாரி டிரைவர்கள் வெப்பநிலை பரிசோதனை, கொரோனா அறிகுறிகள் உள்ளதா என சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை சரக்குவாகன டிரைவர்கள் வரவேற்று உள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்