தேசிய செய்திகள்

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு நீக்கியிருந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோன்று, புழுங்கல் அரிசிக்கு விதிக்கப்பட்ட வரியானது 10 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வரி மாற்ற அறிவிப்பானது நேற்றைய தினத்தில் இருந்து அமலுக்கு வரும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, தீட்டாத அரிசி மற்றும் நெல் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரியும் 10 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வகை அரிசி மற்றும் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இதுவரை 20 சதவீதம் என்ற அளவில் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசு நீக்கியிருந்தது. இதனால், ஏற்றுமதி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருவாயும் மேம்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்