தேசிய செய்திகள்

இந்தியாவில் இருந்து வாழைப்பழம், சோளம் ஏற்றுமதி - கனடா அரசு அனுமதி

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் இதன் மூலம் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா மற்றும் கனடாவின் தேசிய தாவர பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இந்திய வாழைப்பழங்கள் மற்றும் பேபி கார்ன் எனப்படும் மக்காச்சோளத்தை கனடாவிற்கு ஏற்றுமதி செய்ய கனடா அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அகுஜாவை கடந்த 7 ஆம் தேதி கனடா தூதர் கேமரூன் மெக்கே சந்தித்து பேசினார். அப்போது இந்திய வாழைப்பழங்கள் குறித்து அவரிடம் வழங்கப்பட்ட வேளாண் தகவல்களின் அடிப்படையில், அதனை உடனடியாக ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து