தேசிய செய்திகள்

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி - மத்திய வெளியுறவுத்துறை அனுமதி

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1.05 கோடி கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த மாதம் 25 நாடுகளுக்கு 2.40 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய, வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. புனேவைச் சேர்ந்த, சீரம் மையத்தின் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்தை வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்ய, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம், செர்பியா உள்ளிட்ட, 25 நாடுகளுக்கு, 2.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படும். ஏற்கனவே, 20 நாடுகளுக்கு, 1.68 கோடி டோஸ் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட, 13 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, 63 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தும் அடங்கும். இந்த நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...