கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நீட்டிக்கப்படும் காவல்: ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு

ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர் ஜாமீன் கேட்டு 3 முறை தாக்கல் செய்த மனுவை, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஒரு முறை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதற்கிடையே ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி சார்பில் வக்கீல் ராம்சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து