தேசிய செய்திகள்

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் நீட்டிப்பு

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.

இந்தக் காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தின் கால அளவு இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தை மேலும் 180 நாட்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து