தேசிய செய்திகள்

ரீபண்ட் அளிப்பதாக போலி லிங்க்: வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை

ரீபண்ட் அளிப்பதாக கூறும் போலி லிங்க்குகளை வரி செலுத்துவோர் யாரும் அழுத்த வேண்டாம் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வருமான வரி ரீபண்ட் அளிப்பதாக கூறும் லிங்க்குகளை வரி செலுத்துவோர் யாரும் அழுத்த வேண்டாம். இவையெல்லாம் பொய்யானவை. வருமான வரித்துறை இதை அனுப்புவது இல்லை. இ-மெயில் மூலமாக எந்த தனிநபர் தகவல்களையும் கேட்பது இல்லை. அதுபோல், வங்கிக்கணக்கு, கிரெடிட் கார்டு போன்றவற்றின் பின் எண், கடவுச்சொல் போன்றவற்றையும் கேட்பது இல்லை.

எனவே, பொய் செய்தியுடன் வரும் அட்டாச்மெண்ட், பைல் எதையும் திறக்க வேண்டாம். வருமான வரித்துறையால் அதிகாரம் அளிக்கப்பட்டவர் என்று கூறிக்கொள்ளும் எவரது இ-மெயிலுக்கும் பதில் அளிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து