தேசிய செய்திகள்

சக மாணவியுடன் பழகிய கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; 9 பேர் கைது

சக மாணவியுடன் பழகிய கல்லூரி மாணவர் மீது தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கசபா கிராமம் கொடியல்பயலு பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருபவர் பல்லவி. இவர் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் முகமது சனீப் என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இவாகள் இருவரும் பழகுவதை அந்த கல்லூரியின் மற்ற மாணவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் தனது நண்பர்களான வேறொரு கல்லூரியை சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து முகமது சனீப்பை தனியாக வரவழைத்து சரமாயாக தாக்கியுள்ளனர். மேலும் இனிமேல் பல்லவியுடன் பேசினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சனீப் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து சனீப், சுள்ளியா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சனீப்பை தாக்கியதாக தீட்சித், தனுஷ், தனுஜ், அக்சய், மோட்சித் மற்றும் வேறொரு கல்லூரியை சேர்ந்த கவுதம் உள்பட 9 பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை