தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் இன்று திறப்பு

உத்தரகாண்டில் புகழ்பெற்ற கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் இன்று திறக்கப்படுகின்றன.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் 'சார்தாம்' என்று அழைக்கப்படுகின்றன.இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோவில்கள் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் தொடங்கும் போது மூடப்படும். பின்னர் கோடைக் காலம் தொடங்கியதும் மீண்டும் திறக்கப்படும்.அந்த வகையில் 6 மாதங்களுக்கு பிறகு கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 3 கோவில்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பக்தர்களுக்காக திறக்கப்படுகின்றன.

கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்கள் காலை 7 மணிக்கும், கங்கோத்ரி கோவில் மதியம் 12.20 மணிக்கும் திறக்கப்படும் என கோவில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நடை திறப்பையொட்டி கேதார்நாத் கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 குவிண்டால் மலர்களை கொண்டு கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.இதேபோல் பத்ரிநாத் கோவில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு