தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் உறுதியுடன் இருக்கிறார்கள்: ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தினத்தந்தி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் நேற்று முன்தினம் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடத்தினர்.

மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாநிலத்திலும், நாடு முழுவதிலும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற இந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள், அவர்கள் அச்சமற்றவர்கள், இங்கே இருக்கிறார்கள். இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்