புதுடெல்லி
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக ராகுல்காந்தி திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவரின் முடிவை மதிப்பதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
ராகுல்காந்தி எடுத்திருக்கும் முடிவு துணிச்சலானது என்றும், இத்தகைய துணிச்சல் ஒரு சிலருக்கே உண்டு என்றும் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல்காந்தியின் முடிவை மிகவும் மதிப்பதாகவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.