தேசிய செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு சரிவு - அறிக்கையில் தகவல்

பட்ஜெட் மதிப்பீடு அதிகரித்தபோதும் அரசின் நிதி ஒதுக்கீடு படிப்படியாக சரிந்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

100 நாள் வேலை திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த உறுப்பினர்களின் கேள்விக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை மந்திரி கமலேஷ் பஸ்வான் எழுத்து மூலம் பதிலளித்தார்.

அந்த அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கு பட்ஜெட் மதிப்பீடு படிப்படியாக அதிகரித்து இருந்தது. அதேநேரம் அரசின் நிதி ஒதுக்கீடு சரிந்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் 2020-21-ம் நிதியாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரில் இருந்ததால் இந்த திட்டத்துக்காக ரூ.1.11 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ.61,500 கோடியாக இருந்தது.

பின்னர் 2021-22-ல் விடுவிக்கப்பட்ட தொகை ரூ.98,467.85 கோடி (பட்ஜெட் மதிப்பீடு ரூ.73,000 கோடி) என குறைந்தது. அடுத்த ஆண்டில் ரூ.90,810.99 கோடியாகவும் (பட்ஜெட் மதிப்பீடு ரூ.73,000 கோடி), 2023-24-ல் ரூ.88,268.30 கோடியாகவும் ((பட்ஜெட் மதிப்பீடு ரூ.60,000 கோடி) சரிந்தது. இது 2024-25-ல் ரூ.85,838.76 கோடியாக சரிந்துள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.86,000 கோடியாகும்.

இவ்வாறு பட்ஜெட் மதிப்பீடு அதிகரித்த போதும் அரசின் நிதி ஒதுக்கீடு படிப்படியாக சரிந்து வருவது இதன் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு