தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டம் : நாட்டுக்கு சேவை செய்ய இது ஒரு வாய்ப்பு : கடற்படை தளபதி கருத்து

நாட்டுக்கு சேவை செய்ய இது ஒரு வாய்ப்பு என கடற்படை தளபதி கூறியுள்ளார் .

தினத்தந்தி

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து இந்திய கடற்படை தளபதி ஹரி குமார் கூறுகையில் ;

அக்னிபத் திட்டம் இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட திட்டம்.இதுபோன்ற போராட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை. போராட்டம் நடத்துபவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள் என்று கூற விரும்புகிறேன்.அவர்கள் அக்னிபத் திட்டத்தை படித்து புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய இது ஒரு வாய்ப்பு என கூறியுள்ளார் .

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்