தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு -2 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

தினத்தந்தி

ஜம்மு காஷ்மீர் ,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் எனும் பகுதி  உள்ளது. இங்கு மக்கள் வழக்கம் போல்  தங்களது வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர் .அப்போது திடீரென சில பயங்கரவாதிகள் அங்கு வந்தனர் .அங்கு இருந்த மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மீது குண்டு பாய்ந்தது.இதில் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர் .அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.இருவரும் நல்ல நிலையில்  இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில் துப்பாக்கிகச்சூடு நடத்திய நபர்களை தேடுவதற்காக  அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்