தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கட்டிட பணியில் மண் சரிந்து ஒரு குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் கட்டிட பணியில் மண் சரிந்ததில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஜலூர்,

ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் கட்டுமானம் நடந்த இடமொன்றில் தண்ணீர் தொட்டிக்கு குழி தோண்டும்போது, அந்த இடத்தில் திடீரென மண் சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் புதைந்து போயுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் 5 பேரையும் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அவர்கள் உயிரிழந்து விட்டனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்