தேசிய செய்திகள்

2.30 லட்சம் காகித படகுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி

பெங்களூரு ஹெப்பகோடியில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் உள்ள தனியார் அகாடமி சார்பில் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சி நடந்தது. இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகள் காகிதத்தில் தேசிய கொடியை வரைந்து அதனை படகு போல வடிவமைத்து பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். சுமார் ஒரு மணி நேரத்தில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை மாணவ-மாணவிகள் உருவாக்கினர்.

மாணவ-மாணவிகளின் இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த சாதனையை பாராட்டி எலைட் வேர்ட் ரெக்கார்ட், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி உள்ளன. மேலும் மாணவ-மாணவிகளின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு