தேசிய செய்திகள்

பொய் புகார் அளித்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

பொய் புகார் அளித்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு: பெங்களூரு கெங்கேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவிக்குமார். அவர், வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பராமரிப்பு சம்பந்தப்பட்ட வரியை செலுத்தாததால், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் துண்டித்தனர். இதுதொடர்பாக ரவிக்குமார், அதிகாரிகள் தன்னை சாதி பெயரை கூறி திட்டி தொல்லை கொடுப்பதாக அவர்கள் மீது பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோட்டில் ரவிக்குமார் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் கெங்கேரி போலீசார் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது ரவிக்குமார் பொய் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, ரவிக்குமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்